search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் தப்பி ஓட்டம்"

    • தனது மனைவி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • கடந்த 6-ந்தேதி அரிசி மாவு வாங்குவதற்காக விஜயமேரி கடைக்கு சென்றார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் விஜயமேரி (வயது 36). இவரது கணவர் பெத்தனியார் (40).

    இவர் தனது மனைவி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 6-ந்தேதி அரிசி மாவு வாங்குவதற்காக விஜயமேரி கடைக்கு சென்றார். அப்போது வழியில் வந்த நபருடன் விஜயமேரி பேசிக்கொண்டு இருந்ததை கண்ட பெத்தனியார் தகாத வார்த்தையில் திட்டியதுடன், விஜயமேரியின் நெஞ்சில் கத்தியால் குத்தினார். வலியால் சத்தம் போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட பெத்தனியார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந் விஜயமேரி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தப்பிஓடிய பெத்தனியாரை தேடி வருகின்றனர்.

    ×