search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி"

    • குடும்ப பிரச்சினையில் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் கணவனை சரமாரியாக வெட்டினார்.
    • படுகாயமடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கோம்பை துரைசாமிபுரம் 2-வது வார்டை சேர்ந்தவர் ஈஸ்வரன்(36). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஈஸ்வரி (29) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஈஸ்வரனின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு சாப்பாடு தயார் செய்து கொடுக்குமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சாப்பாடு தயாரிக்காமல் இருந்து ள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி தனது கணவன் என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடு த்தார். படுகாயமடைந்த ஈஸ்வரன் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோம்பை சப்-இன்ஸ்பெ க்டர் முத்துச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×