search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர் விபத்து"

    • காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

    கடையநல்லூர்:

    திருச்சியில் இருந்து சிலர் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு ஒரு காரில் வந்தனர். காரை திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்தார்.

    கார் கடையநல்லூர் அருகே அட்டைகுளம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வந்தபோது மேலகடையநல்லூரில் இருந்து விவசாய பணிக்காக சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேராக மோதியது.

    இதில் கார் மற்றும் டிராக்டரின் முற்பகுதி நொறுங்கியது. அப்போது காரில் இறந்த பலூன் வெடித்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதேபோல் டிராக்டரை ஓட்டி வந்த சேகர் என்பவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

    ×