search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையடைப்பு போராட்டம்"

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது.
    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது. இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசுவதும், எதிராக பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

    நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வியாபாரிகள், வாகன டிரைவர், பொது நல அமைப்புகள், கூலித் தொழிலாளர்கள், பொது மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்

    ஊட்டி:

    நாடு முழுவதும் உள்ள தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சூழல் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளது. மேலும் பொது மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அறிவித்து உள்ளனர்.

    ×