search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் தொழிலாளர்கள்"

    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யும் ஆலோசனைக் குழுவின் கூட்டம் சென்னையில் நடக்கிறது.
    • கருத்துக்களை நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என கூடுதல் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் க.ஜெயபாலா தலைவராகவும் உதவி ஆணையர் மு.கார்த்திகேயன் செயலாளராகவும் மற்றும் நிர்வாக பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யும் ஆலோசனைக் குழுவின் கூட்டம் சென்னையில் நடக்கிறது.

    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் கூட்டரங்கில் நாளை (8-ந் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில உள்ள நிர்வாக தரப்பு, தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் பங்கேற்கலாம். கருத்துக்களை நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என கூடுதல் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    ×