என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒலிம்பிக் தினம்"
- விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் ரோஜா வனம் இண்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச ஒலிம்பிக் தின விளையாட்டு போட்டி கள் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் அருள்கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயா சங்கர் வரவேற்று பேசினார்.
பள்ளி இயக்குனர் சாந்தி அறிமுக உரையாற்றினார். விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு விளை யாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் கூடவே விளையாட்டில் ஆர்வம் கொள்வதால் உடல் நலன் மேம்படுவதுடன், நல்ல ஆரோக்கியாமாக வாழலாம் என பேசினார். மேலும் பள்ளியினுடைய அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், விளையாட்டு மைதானம் இவை அனைத்தும் சிறப்பாக அமையப்பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகத்தை பாராட்டினார்.
முன்னதாக அவர் பல்வேறு விளையாட்டு குழுக்களை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரை யாடினார். மாணவர்கள் விளையாட்டில் காட்டிய ஆர்வத்தை பாராட்டினார். மாணவர்களுடனிருந்து ஒவ்வொரு போட்டிகளையும் தொடங்கி வைத்து ஊக்கப்படுத்தினார்.
முடிவில் துணை முதல்வர் அஜிதாகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்