search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் தினம்"

    • விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    • ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரோஜா வனம் இண்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச ஒலிம்பிக் தின விளையாட்டு போட்டி கள் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் அருள்கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயா சங்கர் வரவேற்று பேசினார்.

    பள்ளி இயக்குனர் சாந்தி அறிமுக உரையாற்றினார். விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு விளை யாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் கூடவே விளையாட்டில் ஆர்வம் கொள்வதால் உடல் நலன் மேம்படுவதுடன், நல்ல ஆரோக்கியாமாக வாழலாம் என பேசினார். மேலும் பள்ளியினுடைய அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், விளையாட்டு மைதானம் இவை அனைத்தும் சிறப்பாக அமையப்பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகத்தை பாராட்டினார்.

    முன்னதாக அவர் பல்வேறு விளையாட்டு குழுக்களை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரை யாடினார். மாணவர்கள் விளையாட்டில் காட்டிய ஆர்வத்தை பாராட்டினார். மாணவர்களுடனிருந்து ஒவ்வொரு போட்டிகளையும் தொடங்கி வைத்து ஊக்கப்படுத்தினார்.

    முடிவில் துணை முதல்வர் அஜிதாகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×