search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிப்பான்"

    • பொது இடங்கள் மற்றும் மதவழிபாட்டு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
    • குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டு்ம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் சார்ந்த திருவிழாக்கள், விழாக்கள் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறும் பொது இடங்கள் மற்றும் மதவழிபாட்டு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    திருவிழாக்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் விழாக்களில் ஒலி பெருக்கிகள் உபயோகிப்ப தற்கு தொடர்புடைய போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டரிடம், பொ றுப்பு அலுவலரிடம் உரிய அனு மதி பெற்று அதில் குறிப்பிட் டுள்ள நாள் நேரத்திற்கு மட்டுமே ஒலி பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் கோவில் விழாக்கள், திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் அனுமதி பெறப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்ப டுத்துவதை தடுத்திடும் பொருட்டு அந்தந்த ஊர் பொறுப்பு நிர்வாகிகள் அதனை கண்காணித்து விதி மீறலை தவிர்த்திட வேண்டும்.

    அனுமதி பெறாமல் ஒலி பெருக்கிகள் பயன் படுத்துவது முற்றி லும் தவிர்க்கப்பட வேண்டும்.

    முதியவர்கள், குழந்தை கள், உடலநலம் பாதிக்கப்பட் டவர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள், கல்வி பயிலும் மாணவ- மாணவிகள் பொது நலனை கருத்திற்கொண்டு விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிபெருக்கிகள் பயன் படுத்துவதை அந்தந்த பொறுப்பு நிர்வாகிகள் உறுதி செய்திடவேண்டும்.

    வரையறுக்கப்பட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர்புடைய பகுதி போலீஸ் இன்ஸ்பெக் டர்கள் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி உரிமம் பெற்றுள்ள கட்டுப்பா டுகளை மீறி செயல்படு பவர்கள் மீது ஒலி மாசு விதி 2000-ன் உட்பிரிவு 3(1)ன்படி பொருட்கள் பறிமுதல் செய்து சட்டப் பூர்வ நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

    காலை நேரங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை குறிப்பிட்ட விழாக்களில் அனுமதி பெறப்பட்டிருப்பின் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தி கொள்ளப்படவேண்டும்.

    பொது இடங்களில் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் ஒலி பெருக்கிகள் பயன் படுத்தக்கூடாது. இதனை அந்தந்த பகுதி காவல் நிலைய பொறுப்பாளர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    மேற்படி சட்ட விதி மீறல் நடவடிக்கையில் ஈடு பட்டு அதிக ஒலி எழுப் பும் ஒலிப்பான்கள் பயன்ப டுத்துதல் அதிக நேரம் மற்றும் இரவு நேரங்களில் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் நபர்கள் மீது இன்ஸ்பெக்டர் மூலம் 500 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது.

    மெட்ராஸ் நகர காவல் சட்டம் 1888 பிரிவு 71 யு உட்பிரிவு 1-ல் எந்த வொரு காவல்துறை அதிகாரியும் அவர் சார் பாக உருவாக்கப்படும் விதி களுக்குட்பட்டு துணைப்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப் பட்ட உரிமத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்த னைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அதை சார்ந்த பொருட்களை பறிமுதல் செய்யலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    ×