search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா சுற்றுசூழல் அமைப்பு"

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பும், ஈஷா அறக்கட்டளையும் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக நாளை (5-ந்தேதி) 250-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன.
    கோவை:

    இதன் முக்கிய நிகழ்வாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் செயல் இயக்குநர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் இந்தியாவுக்கான நல்லெண்ண தூதர் டியாமிர்சா ஆகியோருடன் டெல்லியில் 5-ந் தேதி கலந்துரையாட உள்ளார்.

    நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், மரபின் மைந்தன் முத்தையா, விவசாய சங்க தலைவர் நல்லசாமி, கோவை மாவட்ட லயன்ஸ் கிளப் கவர்னர் காளிசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    இந்தாண்டு ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுப்போம்’ என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (5-ந்தேதி) ஈஷா தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள பொது இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர்.

    இது தொடர்பாக சத்குரு கூறும்போது,

    “வரமாக இருக்க வேண்டிய ஒன்றைக்கூட விழிப்புணர்வின்றி இருக்கும் போது மனிதர்கள் எப்படி சாபமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பதற்கு பிளாஸ்டிக் ஒரு சிறந்த உதாரணம். பொறுப்புணர்வோடு பிளாஸ்டிக்கை கையாண்டு, ‘சிங்கிள்யூஸ்’ பிளாஸ்டிக்கை தடை செய்யும் கொள்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது” என்றார்.
    ×