search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி ஓன்றிய பள்ளிக்கூடம்"

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    பெருமாநல்லூர், செப்.27-

    திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோதிநாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் தனபால் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    ×