search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவர் கூட்ட விழா"

    • நன்மை தரும் தொழில்நுட்பங்கள் பற்றி முருகன் விரிவாக பேசினார்.
    • வேளாண் செயலிகள் குறித்து மாசானசெல்வம் பேசினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் மூலம் ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் உழவர் கூட்ட விழா இன்று நடந்தது. வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் முருகன் (உழவியல்) மற்றும் மாசான செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர் முருகன் விவசாயத்தில் கடைபிடிக்கப்படும் நன்மை தரும் தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக பேசினார். வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் மாசானசெல்வம் வேளாண் செயலிகளின் விவசாய பயன்பாடுகள் குறித்தும் உபயோகிக்கும் முறைகள் குறித்தும் விவரிவாக விளக்கி பேசினார்.

    உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் முருகன் தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட ஊராட்சி துணைத்தலைவர் லதா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து வேளாண் தொழில்நுட்பங்கள் ஊர்மக்களுக்கு சென்றடையும் வகையில் விவசாயிகள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார அட்மா தொழில்நுட்ப வல்லுநர்கள் இசக்கிராணி, ஆனந்தி, மற்றும் அசோக், அய்யாசாமி, ஆகியோர் செய்திருந்தருந்தனர்.

    ×