search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளிருப்பு போராட்டம்"

    • தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
    • பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டது

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சி யின் சாதாரண கூட்டம் தலைவர் சுமன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர்.

    ரூ. 15 லட்சம் செலவில் எலக்ட்ரிக் வேலை மேற்கொள்வது, ரூ.1 கோடி செலவில் மீன் சந்தை புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், கூடுதல் செலவாக ரூ. 50 லட்சம் செய்ய வேண்டும்.

    பஸ்நிலையத்தில் வேகத்தடை உயரத்தை குறைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே முடிவு பெற்ற பணிகளுக்கு மீண்டும் செலவு செய்ய இருப்ப தாகவும், மதிப்பீடு செலவு கள் அதிகமாக இருப்ப தாகவும் கூறி மொத்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஜெயசேக ரன், சரவணன், முத்துக் குமார், கவுதமி, சுஜாதா, காங்கிரஸ் கட்சி கவுன்சி லர்கள் பீட்டர் தாஸ், சுகன்யா மற்றும் ஹேமா ஆகிய 8 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    அவர்களுடன் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. மதியம் தொடங்கிய போரா ட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. இது தொடர்பாக இரணியல் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், பேரூராட்சி அலுவலகம் வந்து போரா ட்டத்தில் ஈடுபட்ட கவுன்சி லர்கள் மற்றும் செயல் அலுவலர் எட்வின் ஜோசி டம் தனித்தனியாக பேசினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் கூறும் போது, தீர்மானம் ரத்து செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் கேட்கி றார்கள். நாங்கள் ஓத்தி வைக்கலாம் என்று கூறு கிறோம் என்றார்.

    உள்ளிருப்பு போராட்ட த்தில் ஈடுபட்ட கவுன்சில ர்கள் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் தங்களுக்குள் பேசி முடிவு சொல்கிறோம் என்று கூறினர். தொடர்ந்து பேச்சு வார்த்தை யில் முடிவு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் திங்கள் நகர் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×