search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள்மோதல்"

    • மோகன்ராஜ் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
    • நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருேக தூக்கணாம்பாக்கம் பகுதி சின்ன குட்டியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி நந்தினி (வயது 27). சம்பவத்தன்று இவரது உறவினர் மோகன்ராஜ் என்பவர் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டிலிருந்த டிவி, கதவு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நந்தினி தரப்பினருக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் நந்தினி மற்றும் விஜயகுமார் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்‌. 

    இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் மோகன்ராஜ், கலைவாணி, விஜயகுமார், கலையூரை சேர்ந்த சிவரஞ்சனி ஆகியோர் மீதும், விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மகேஸ்வரி, நந்தினி, காரைக்காட்டை சேர்ந்த ரமணி, ரம்யா உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×