search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தமர் காந்தி விருது"

    • 17-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து இவ்விருதுக்காக கிராம ஊராட்சிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வு குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைமை வகிக்கும் ஒரு கிராம ஊராட்சி, ஒரு மகளிர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி, இதர சிறந்த கிராம ஊராட்சிகள் 3 என்ற விகிதத்தில் 5 ஊராட்சிகளை தேர்வு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    அதன்படி சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தன்று உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதும் மற்றும் வரையறுக்கப்படாத நிதியாக ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

    எனவே இவ்விருதுக்கு tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 17-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பிக்க அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் கேட்டுகொள்ள ப்படுகிறார்கள்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • http:/tnrd.tn.gov.in/ என்கிற இணையதளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையிலும் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையில் உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒன்று வீதம் சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், புதுமையான முயற்சிகள் எடுத்து மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடையும் கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் http:/tnrd.tn.gov.in/ என்கிற அரசின் இணையதளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையிலும் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், பின்வருமாறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி http:/tnrd.tn.gov.in/ முகவரியை தேர்வு செய்யவும். மேற்படி இணையதளத்திலுள்ள கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும். மேற்படி பயனரின் முகவரியில் அறிக்கை எண்.12-ஐ தேர்ந்ெதடுக்கவும். அதன் அடிப்படையில் அரசாணையில் உள்ள அனைத்து தேர்வு காரணிகளும் அடங்கிய உள்ளீடு செய்திடும் படிவம் இருக்கும். அப்படிவத்தினை முறையே பதிவு செய்து Save பொத்தானை அழுத்திசேமிக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    ×