search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுக்குழாய்"

    • 5 வயது குழந்தை தனது கையில் கிடைத்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டாள்.
    • குழந்தையின் பெற்றோர் உடனடியாக பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், பல்லகவுண்டம்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை தனது கையில் கிடைத்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டாள். நாணயம் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் அந்தக் குழந்தை தொண்டையைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டு அழுதாள்.

    குழந்தையின் பெற்றோர் உடனடியாக பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் உணவுக்குழாயில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து குடல் இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் நாணயத்தை வெளியே எடுத்தனர். அவர்களுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    • தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.
    • கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.இது குறித்து கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பரிசோதித்த உதவி மருத்துவர் அறிவு செல்வன், உணவுக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும், பீட்ரூட் உணவு குழாயில் அடைத்திருப்பதாக தெரிவித்த அவர், மாட்டின் வாய்க்குள் கைகளை நுழைத்து முழு பீட்ரூட்டை வெளியே எடுத்தார். இதன்பின், மாடு சகஜ நிலைக்குத் திரும்பியது. உதவி மருத்துவர் கூறுகையில், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை முழுமையாக கால்நடைகளுக்கு உணவாக வழங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடும் கால்நடைகளின் உணவு குழாயில் அடைத்து கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தாகும் அபாயம் உள்ளது என்றார்.

    ×