search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைந்தது"

    • சேலம் அணைமேடு ரெயில்வே கேட் மினி வாகனம் மோதி உடைந்தது.
    • இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     சேலம்:

    சேலத்தில் இருந்து அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம் வழியாக அரூர், பேளூர், ஆத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பத்துார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணைமேடு ரெயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும் .

    காலை மாலை என இரு வேளைகளிலும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் செல்லும் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ரெயில்வே கேட் பகுதியாக அணைமேடு ரெயில்வே கேட் இருந்துவருகிறது.

    சேலம் - விருதாச்சலம் நெடுஞ்சாலை பிரிவில் இந்த இடம் அமைந்துள்ளது. ரெயில் செல்லும் ஒவ்வொரு சமயத்திலும், கேட் அடைக்கப்படும்போது இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இந்த ரெயில்வே கிராசிங் பகுதியில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு, மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

    இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ரெயில்வே கேட்டில் மினி வாகனம் மோதியது. இதனால் கேட் சேதமானது.

    இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கேட் உடைந்ததால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • ஏழு கண் மதகில் தடுப்பணை உடைந்து நீர் வெளியேறியது
    • 500 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சேதம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ளது ஏழு கண் மதகு. இந்த மதகானது சிந்தாமணி வடிகால் ஓடையாகும். இந்த ஏழு கண் மதகு உடையார்பாளையம், ஜெயங்கொண்ட பகுதியில் பொழியக்கூடிய மழை நீர் கொள்ளிடத்தில் கலக்கக்கூடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் நூறு ஆண்டுகள் பழமையான இந்த மதக ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இந்த தடுப்பணை மதகுகள் பழுதடைந்ததால் இதனை சீரமைக்க கூறி பல முறை மனு அளித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரி நீர் கொள்ளிடம் கீழணை பகுதியில் சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேல் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் 7 கண் மதகில் முதல் கதவணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேறிய தண்ணீர் வடிகால் வாய்க்கால் வழியாக நுழைந்து விவசாய நிலங்களில் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    தற்பொழுது அன்னங்காரம்பேட்டை, கோடாலி கருப்பூர், உதயநத்தம் கிழக்கு, கண்டியங்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள 25 நாட்களேயான சம்பா நடவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. மேலும் இதனை சுற்றியுள்ள கிராமங்களையும் தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே உடைந்த மதகு பகுதிகளை பொதுமக்கள் தாங்களே முன்னின்று சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×