search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை"

    • இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
    • மாவடத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது.

    நத்தம்:

    இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி பகுதியில் உள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்தில் ஊர்வலமாக சென்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்ப ட்டது. தொடர்ந்து இஸ்லாமி யர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் தொழுகைக்கு பின் குர்பானி கொடுத்தனர். தொடர்ந்து பிற மதத்தை சேர்ந்த நண்பர்களுக்கு விருந்துகள் கொடுத்தும் உபசரித்தனர்.

    திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமிய ர்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை செய்தனர். இதேபோல் பழனி சண்முகாநதியில் உள்ள பள்ளி வாசலிலும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட ப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வாழ்த்து க்களை பறிமாறிக் கொண்ட னர். பின்னர் குர்பானி தங்கள் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

    ×