search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்"

    • விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் தர்மபுரி விஜயா அழைப்பு விடுத்துள்ளார்.
    • தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் கிராமப்புர இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வரவும்.

    தருமபுரி,

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 'அங்கக வேளாண்மை' என்ற தலைப்பில் 20 விவசாயிகளுக்கு 30.01.2023 முதல் 20.02.2023 வரை 15 நாட்களுக்கு (120 மணி நேரம்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    எனவே 5-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஆர்வமுள்ள ஊரக விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் தர்மபுரி விஜயா அழைப்பு விடுத்துள்ளார்.

    எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் கிராமப்புர இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் பயிற்சி நிலையத்தில் 25.01.2023- க்குள் விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குநர், விஜயா தெரிவித்துள்ளார்.

    • தாட்கோ மூலம் நடைபெறும் திறன் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இந்த திட்டத்தில் தகுதி யுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்ப டையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேசன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்பு டைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கல்வித் தகுதியில் பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.2 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

    இந்த பயிற்சியை வெற்றி கரமாக முடிக்கும் பட்சத்தில் AEROSPACE SKILL SECTOR COUNCIL -யால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப் படும். இந்த பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go First,Vistra, Air India போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும்.

    இந்த திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×