search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை தமிழர் முகாம்"

    • விருதுநகர் அருகே இலங்கை தமிழர் முகாம்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
    • சாவியினையும், வீட்டு உபயோக பொருட்களையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் கட்டப்பட்டுள்ள ரூ.79.70 கோடி மதிப்பில் 1591 புதிய வீடுகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி செவலூரில் ரூ.3.11 கோடி மதிப்பில் 62 வீடுகள், அனுப்பன்குளம் மையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் 8 வீடுகள், குல்லூர்சந்தை மையத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் என மொத்தம் ரூ.7.2 கோடி மதிப்பில் 140 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

    இதற்கான நிகழ்ச்சி சிவகாசி செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பின்னர் புதிய வீடுகளை பார்வையிட்டு கலெக்டர் குத்துவிளக்கேற்றி னார். புதிய வீடுகளுக்கான சாவியினையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்க ளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஸ்வநாதன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×