என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரும்பு ராடால் சிறுவன் அடித்து கொலை"
- நேற்றிரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த முருகேசன் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- இது தொடர்பாக போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தியதில் முருகேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக பிரபு கொலை செய்தது ெதரியவந்தது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் தூய்மை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முருகேசன் (17). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபு (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த முருகேசன் என்பவர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தியதில் முருகேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக பிரபு கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்