search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி"

    • இருசக்கர வாகனம் பெருமாள் மீது மோதியது.
    • சிகிச்சை அளிக்கப்பட்டும் பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார் .

    நேற்று காலை தனது கடையிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தருமபுரி-சேலம் சாலையில் வந்த இருசக்கர வாகனம் பெருமாள் மீது மோதியது.

    இதில் பெருமாள் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சம்பவ இடத்திலேயே ராமன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேப்பனப்பள்ளி, ‌

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது65). விவசாயியான இவர் நேற்று கொத்தகிருஷ்ணப்பள்ளி யில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வேப்பனப்பள்ளி அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேஷன் (26)என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே ராமன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியான ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ேசஷனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×