search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டைரெயில்பாதை"

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது

    தென்தாமரைகுளம் :

    கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது.

    கேரளாவில் 38 சதவீத மும், தமிழ்நாட்டில் 14 சதவீதம் நில ஆர்ஜி தம் முடிந்துள்ளது. இந்த இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

    பணிகள் காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் சுக்குபாறைதேரி விளை ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று (21-ந் தேதி) மாலை. 4.30 மணி அடைக்ககப்பட்டது இந்த கேட் அடுத்த மாதம் (டிசம்பர்) 20ம் தேதி இரவு 10 மணி வரை 30 நாட்களுக்கு அடைக்கப் பட்டு இருக்கும்.

    எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லு மாறு அங்கு வைக்கப் பட்டுள்ள அறி விப்பு பலகையில் தெரி விக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்வேகேட் அகஸ்தீஸ்வரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியில் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது.

    இந்த கேட் மூடப்பட்டு உள்ளதால் இந்த வழி யாக கல்லூரி, பள்ளி மற்றும் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்கள், மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி பஸ், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக கன்னியாகுமரி மற்றும் கல்லூரி, பள்ளி களுக்கு செல்லும் வாக னங்கள், இருசக்கர வாக னங்கள் மாற்று வழியாக. அகஸ்தீஸ்வரம், மாடு கட்டிவிளை சரவணன் தேரி, சுக்குப்பாறைதேரிவிளை வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ப வர்களும், கன்னியா குமரிக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி குள்ளாகியுள்ளனர். 

    ×