search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி"

    • பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
    • அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி எதிரே இயங்கி வரும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதியில் உள்ள 43 கோவில்களுக்கான வழங்கப்பட்ட அரசு நிதியையும் கோவில் அறநிலையத்துறை உண்டியல் பணங்களையும் அறநிலையத்துறை வங்கிக் கணக்கானது ஆய்வாளர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து இவர் மோசடி செய்யும் நோக்கத்தோடு வங்கி கணக்கு புத்தகங்களில் அளித்தல் மற்றும் மாறுதல் செய்து அரசு ஆவணங்களை சரிவர பராமரிக்கப்படாமல் அரசு பணம் ரூ.86,06,026 பணத்தை எடுத்து கையாடல் செய்ததாக தெரியவந்தது.

    மேலும் அரசு சொத்தினை ஏமாற்றி பணத்தைக் கையொப்பமிட்டு அரசு முத்திரையும் பயன்படுத்தி வஞ்சித்துள்ளதாகவும் பால்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜோதி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதியப்பட்ட வழக்கினை விசாரணை அதிகாரி சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், முன்னாள் அறநிலையத்துறை அலுவலர் பால்வண்ணன் மீதான வழக்கினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது பால்வண்ணன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×