search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைப்பு பாலம்"

    • மாலை மலர் செய்தி எதிரொலி
    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தவிட்டது. அதன் பயனாக ரூ.30 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் மட்டும் நடந்து வந்தது. ஆனால் இதன் மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் இந்த இணைப்பு பாலத்துக்கான பணிகளில் தீவிரம் காட்டாமல் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. மேலும் இந்த பால பணியினால் கடந்த 6 மாத காலமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை என்றும், இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரடியாக பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என்றும், கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது என்றும் இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது என்றும் இந்த சீசன் காலங்களில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கன்னியா குமரிக்கு வருவார்கள் என்றும், எனவே இந்த இணைப்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து வருகிற சபரிமலை சீசன் காலம் முடிவதற்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் மாலைமலரில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

    அதன் எதிரொலியாக தற்போது திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதைதொடர்ந்து இதன் மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை யிலும் இந்த கண்ணாடி கூண்டு இணைப்பு பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • திருவள்ளுவர் சிலைக்கு 6 மாதங்களாக படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஆண்டுக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் மூலம் பொதி கை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. இயற்கை யாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளு வர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்கு வரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்ப டுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள் ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்ட தாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல்அலையை ரசிக் கும் வண்ணமாக வெளி நாடுகளில் அமைக்கப்பட் டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டுபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்துக்கான கட்டு மான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை யில் மட்டும் மந்தமாக நடந்து வருகிறது. இந்த பணி தொடங்கி 6 மாதங்கள் ஆன பிறகும் திருவள்ளுவர் சிலையில் இணைப்பு பாலத்துக்கான தொடக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மறுபுறம் அமைந் துள்ள விவேகானந்தர் பாறையில் இந்த இணைப்பு பாலத்துக்கான எந்தவித பணிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த பால பணியினால் கடந்த 6 மாத காலமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள் ளுவர் சிலையை பார்க்க முடியாமல் தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமாக உள்ளனர். சமீபத்தில் தான் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசுவ தற்காக 7 மாத காலமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த ரசாயன கலவை பூசும் பணி முடிந்த பிறகு ஒரு சில மாதங்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக் கப்பட்டு வந்தது. இதற்கிடை யில் இந்த பாலப்பணியும் உடனடியாக தொடங்கி யதால் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரடியாக பார்க்க முடியா மல் ஏமாற்றம் அடைந்துள் ளனர்.

    இந்த நிலையில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்கு கிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இந்த சீசன் காலங்களில் லட்சக்க ணக்கான அய்யப்ப பக்தர்க ளும், சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வரு வார்கள்.

    எனவே இந்த இணைப்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து வருகிற சபரிமலை சீசன் காலம் முடிவதற்குள் பயன்பாட் டுக்கு கொண்டுவர வேண் டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×