search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடிந்து விழும் மேற்கூரை"

    • ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.
    • சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே சிறுகுடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒடுக்கம்பட்டி, நல்லகண்டம் மஞ்ச நாயக்கன்பட்டி, பூதக்குடி உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் அப்பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.

    மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி ஊரல் ஏற்பட்டதால் அந்த கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.

    மேலும் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்காக முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்ள சுமார் 15 கி.மீ. தூரமுள்ள நத்தம் மற்றும் திண்டுக்கல் அல்லது மதுரை, கொட்டா ம்பட்டி, ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஆகையால் கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும், புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை சேதமடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நோயாளிகளும், பணியில் உள்ள டாக்டர்களும், செவிலியர்களும் அச்சப்பட்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செல்ல தயங்குகின்றனர். இந்த சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.

    ×