search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Centre"

    • ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.
    • சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே சிறுகுடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒடுக்கம்பட்டி, நல்லகண்டம் மஞ்ச நாயக்கன்பட்டி, பூதக்குடி உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் அப்பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.

    மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி ஊரல் ஏற்பட்டதால் அந்த கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.

    மேலும் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்காக முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்ள சுமார் 15 கி.மீ. தூரமுள்ள நத்தம் மற்றும் திண்டுக்கல் அல்லது மதுரை, கொட்டா ம்பட்டி, ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஆகையால் கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும், புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை சேதமடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நோயாளிகளும், பணியில் உள்ள டாக்டர்களும், செவிலியர்களும் அச்சப்பட்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செல்ல தயங்குகின்றனர். இந்த சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.

    • சோழவந்தான் அருகே அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
    • இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் காடுபட்டி, புதுப்பட்டி, வடகாடுபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் காடுபட்டி கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதை அமைச்சர் மூர்த்தி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    மருத்துவர் அருண்கோபி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார். கச்சகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரபாகரன், ராமகிருஷ்ணன், சதீஷ், கிராம செவிலியர் உஷா செல்வமணி, மக்களை தேடி மருத்துவ பணியாளர் மலர்விழி மற்றும் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பல ர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் நன்றி கூறினார்.

    • ரூ.6¼ கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டது.
    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி திறந்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் புதிதாக ரூ. 6 கோடியே 34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 14 ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், மூர்த்தி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள குழந்தைகள் நல மையத்திற்கான பூமி பூஜை விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர் பேசுகையில், மக்கள் நலத்திட்டங் களுக்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லினை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளி நாட்டினரும் பாராட்டு கிறார்கள்.

    மதுரையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், பாதாள சாக்கடை, மின் விளக்கு வசதி செய்து தரப்படும். தி.மு.க. ஆட்சியில் ஏழை பெண் குழந்தைகள் கல்லூரி படிக்கும்போது மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்ப டுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-

    மதுரை தோப்பூரில் 5 ஏக்கரில் ஓமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி விரைவில் வர உள்ளது. இதற்காக ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை பார்த்தால் 2028-ம் ஆண்டு தான் வரும் என தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க மத்திய அரசு கவனம் செலுத்த வில்லை. ஆனால் தமிழக அரசு பணிகளை தொடங்கி வருடத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படிக்க வசதிகள் செய்யப் பட்டுள்ளன. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின் 45 புதிய மருத்துவ மனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, எம்.பி.வெங்கடேசன், மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன்,மண்டலத் தலைவர்கள் வாசுகிசசி குமார், சுவிதா விமல், முகேஷ் சர்மா,மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, திமுக நிர்வாகிகள் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன், சோமசுந்தர பாண்டியன், மருதுபாண்டி, சசிகுமார், நேருபாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நாகப்பட்டினம் தொகுதியில் புதிய கட்டடம் வேண்டுமென்று அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாகப்பட்டினம் தொகுதி திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கணபதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா என்று கேள்வி எழுப்பியி ருந்தேன். அதற்கு பதிலளித்த, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.

    அதன்படி, இரண்டே மாதங்களில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருக்கண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், திருப்பயத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 120 லட்சமும், கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூபாய் 110 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் வேண்டுமென்று ஏற்கெனவே அமைச்சரிடம் மனு அளித்திருந்தேன். அதன்படி ஆழியூர் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும், பெரியக ண்ணமங்கலம் துணை சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைவருக்கும் சுகாதார வசதி திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டதாக பிரதமர் பாராட்டு

    நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில்  டிசம்பர் 31 ஆம் தேதி (இன்று) க்குள் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியா தான் நினைத்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதாகவும், இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 


    மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை யதார்த்தமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடி இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் நாடு முழுவதும் மக்கள் ஆரம்ப சுகாதார வசதிகளை எளிதாக பெற உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக நாடு முழுவதும் 86.90 கோடிக்கும் அதிகமானோர் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சோலார் அருகே உள்ள 46 புதூர் ஊராட்சி பிரியா பாறை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 96 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த 2007-ல் அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் சுகாதார இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை திறந்து வைத்தார்.

    இதனையடுத்து 46 புதூர் பஞ்சாயத்து முழுவதும் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தில் கொட்டப்பட்டு, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த பகுதி ஊராட்சிக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சனை இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வந்தனர்.

    இந்நிலையில் குப்பை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடிக்க பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ேநற்று மாலை 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    அப்போது நீதிமன்ற அட்வகேட் கமிஷனரிடம் ஊராட்சிக்கு வேறு பகுதியில் இடம் கொடுத்து விட்டு தற்பொழுது இயங்கும் திடக்கழிவு கூடாரத்தை இடித்து அகற்றுங்கள் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் ஊராட்சிக்கு வேறு எங்கும் குப்பை கொட்ட இடம் இல்லாததால் அதே இடத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    தவிர தற்பொழுது இயங்கும் கூடாரத்தை இடித்து அகற்றினால் ஊராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி, குப்பை கள் அகற்ற முடியாமல் குப்பை காடாக மாறிவிடும். நோய் தொற்று அதிகரிக்கும். சுகாதாரம் சீர்குலைந்து விடும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் பொதுமக்களின் கருத்தை ஆய்வு செய்வதாக தெரிவித்து சென்றார். இதனால் 46 புதூர் ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.

    • வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விரைவில் வண்ணாங்குண்டு துணை சுகாதார நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நஜீமுதின், வண்ணாங்குண்டு நகர் நிர்வாகிகள் அர்சாத், அல் நவ்பர், லாபிர் அலி, அசாருதீன், சபீக் அலி, அசன், சரீப், அல் பாசிம், சுஹைல், ஜீபைர், பஹத் ஆகியோர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

    அதில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பதற்கு தாமதம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதி மக்கள் பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அவசர கால சிகிச்சை மேற்கொள்வதற்கும் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

    கட்டி முடிக்கப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.விரைவில் வண்ணாங்குண்டு துணை சுகாதார நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

    ×