search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்
    X

    புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்

    • ரூ.6¼ கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டது.
    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி திறந்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் புதிதாக ரூ. 6 கோடியே 34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 14 ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், மூர்த்தி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள குழந்தைகள் நல மையத்திற்கான பூமி பூஜை விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர் பேசுகையில், மக்கள் நலத்திட்டங் களுக்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லினை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளி நாட்டினரும் பாராட்டு கிறார்கள்.

    மதுரையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், பாதாள சாக்கடை, மின் விளக்கு வசதி செய்து தரப்படும். தி.மு.க. ஆட்சியில் ஏழை பெண் குழந்தைகள் கல்லூரி படிக்கும்போது மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்ப டுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-

    மதுரை தோப்பூரில் 5 ஏக்கரில் ஓமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி விரைவில் வர உள்ளது. இதற்காக ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை பார்த்தால் 2028-ம் ஆண்டு தான் வரும் என தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க மத்திய அரசு கவனம் செலுத்த வில்லை. ஆனால் தமிழக அரசு பணிகளை தொடங்கி வருடத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படிக்க வசதிகள் செய்யப் பட்டுள்ளன. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின் 45 புதிய மருத்துவ மனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, எம்.பி.வெங்கடேசன், மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன்,மண்டலத் தலைவர்கள் வாசுகிசசி குமார், சுவிதா விமல், முகேஷ் சர்மா,மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, திமுக நிர்வாகிகள் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன், சோமசுந்தர பாண்டியன், மருதுபாண்டி, சசிகுமார், நேருபாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×