search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடி மின்னலுடன் கனமழை"

    • விவசாய நிலங்களிலும், சாலை களிலும் தண்ணீர் தேங்கியது.
    • ஓசூரில் அதிகபட்சமாக 53.1 மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

      தருமபுரி,

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழைக்கும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் மாலை திடீரென கனமழை பொழிய தொடங்கியது. இதில் தருமபுரி நகர் பகுதி மற்றும் இலக்கியம்பட்டி, பென்னா கரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதி களில் கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களிலும், சாலை களிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.

    மேலும் மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்து தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. மேலும், ஓசூர் பஸ் நிலையம், ஜி.ஆர்.டி.சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மழை நீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு ஓட்டிச் செல்லப்பட்டன. பலத்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தவாறு இருந்தது. மாவட்டத்திலேயே ஓசூரில் தான் அதிகபட்ச மழை பெய்து, 53.1 மி.மீ பதிவானது குறிப்பிடத்தக்கது.

    ×