search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவடி போலீஸ் கமிஷனர்"

    • கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
    • கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மீஞ்சூரை அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

    இதனையடுத்து வல்லூர் சந்திப்பில் இருந்து மணலி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சரக்கு பெட்டக வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி வழித்தடத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது மக்களின் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் துறைமுகம் நோக்கி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்கு வரத்து நெரிசல் குறையும். சாலை யோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அதிவேகமாகவும், சாகசங்கள் செய்தபடியும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சாலை தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஓட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக போலீஸ் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை கண்ணியமான முறையில் காவலர்கள் நடத்த வேண்டும்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஆவடி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று காலையில் ஆவடியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட சங்கருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதிய கமிஷனர் சங்கர், ஆவடி பகுதியில் குற்றங்களை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    ஆவடி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள், செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக போலீஸ் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை கண்ணியமான முறையில் காவலர்கள் நடத்த வேண்டும் என்றும், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி பொதுமக்களின் குறைகளை போக்கும் வகையில் காவலர்களின் செயல்பாடு இருக்கும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வாங்கி தருவோம். ஆவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்படும். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்றவாளிகளின் நடமாட்டத்தை குறைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

    இவ்வாறு கமிஷனர் சங்கர் தெரிவித்தார்.

    ×