search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை முகாம்"

    • முகாமானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.
    • முகாமிற்கான ஏற்பாடு களை ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ மனையில் மார்பக புற்று நோய்க்கான இலவச ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று தொடங்கியது. முகாமானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

    முகாமில் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய் விழிப்புணர்வு, அதனை எதிர்கொள்ளும் முறை, அறுவை சிகிச்சை பற்றி ஆலோசனைகள், மருந்து முறைகள், புற்றுநோய் வரும்முன் தடுப்பது குறித்த ஆலோசனைகள், ஏற்கனவே மார்பக புற்றுநோய் கண்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மேலும் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ரூ.500 சிறப்பு கட்டணத்தில் மேமோ கிராம் சிறப்பு சிகிச்சை செய்யப்படுகிறது. முகாமில் புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை டாக்டர்கள் பாலா, நிதிலா, ஸ்காட், கண்மணி, பிரஜித், தேவநாயகம், டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் ஆகியோர் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    முகாமிற்கான ஏற்பாடு களை ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

    ×