search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுகாணி"

    • அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படக்கூடிய இச்சாலையில் மூடுவது முறையல்ல
    • இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஆறு காணி பகுதியில் இருந்து சூரக்காணி கேர ளாவையொட்டி இருக்கக் கூடிய பகுதிகளுக்கு செல் லக்கூடிய சாலையின் குறுக்கே சோதனை சாவடி உள்ளது. தற்போது வனத்துறையினர் திடீரென்று கேட் அமைத்து மூடுவதற்காக கேட்டுடன் வந்து சாலையை மூடுவ தற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இப்பகுதியில் கேட்டு அமைத்து தடைசெய்தால் யாரும் வனத்துறையின் அனுமதி இல்லாமல் சாலை யை கடக்க முடியாது. ஒவ்வொரு முறையும் சாலையை கடக்கும் பொழுதும் கையெழுத்து போட்ட பின்பு தான் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் செல்லமுடியும். இரவு நேரங்களில் கேட்டை திறந்து தருவதற்கோ திடீரென்று சாலையை கடப்பதற்கோ பொதுமக்களுக்கு இயலாது. ஆகையால் இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறி யுள்ளனர்.

    இது சம்பந்தமாக நேற்று மாலை சுமார் மாலை 5 மணி அளவில் தொடங்கிய போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. பின்னர் திருவட்டார் இன்ஸ்பெக்டர், கடையால் மூடு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்டிஓ மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர்களுடன் கலந்துரையாடிய தீர்மா னிக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்தபின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

    கடையால்பேரூராட்சி தலைவர் கூறும்போது, கடையால் மூடு பேரூராட்சி ஆனது நிலப்பரப்பில் பெரிய பேரூராட்சி மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பேரூராட்சி எல்லா தரப்பு மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர்.கேரளா பகுதியோடு ஒட்டி இருக்கக்கூடிய பேரூராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    அவசர தேவைகள் என் றால் கேரளாவிற்கு அதாவது திருவனந்தபுரம் மாவட் டத்தை அமைந் துள்ள பனச்ச மூடு, வெள்ள றடை, அம்பூரி, ஆனபாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கக் கூடிய பகுதியில் வெகு விரைவாக சென்று வரவும் ஆனப்பாறையில் அமைந்துள்ள கேரளா அரசின் அரசு மருத்துவ மனைக்கு அவசர சிகிச் சைக்காக செல்லவும் இப்பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதேபோன்று திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்லக்கூடிய நோயாளி களை இச்சாலைவழியாக தான் கொண்டு செல்ல வேண்டும். எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிகம் பயன்படக்கூடிய இச்சாலையில் சோதனை சாவடி இருந்தும் மறுபுறம் வனத்துறையினர் கேட்டு போட்டு மூடுவது என்பது முறையல்ல அதை ஒரு போதும் அனுமதிக்க முடி யாது என பேரூராட்சி தலைவர் கூறியுள்ளார்.

    ×