search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பிட்ரேசன் கவுன்சில்"

    • 6 மாதமாகியும் கட்டண தொகை வழங்க மறுப்பதாக, ஆடை உற்பத்தி நிறுவனம் மீது சாய ஆலை கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.
    • ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்த உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனம் அருள்புரத்தில் உள்ள சாய ஆலைக்கு பின்னல் துணிக்கு சாயமேற்றுவதற்கான ஆர்டர் வழங்கியுள்ளது.அதனடிப்படையில் துணிக்கு சாயமேற்றி வழங்கியுள்ளது சாய ஆலை. துணியை பெற்றுக்கொண்ட ஆடை உற்பத்தி நிறுவனம் சாய ஆலைக்கு உரிய கட்டண தொகையை வழங்காமல் இழுத்தடித்துவருகிறது.

    இதையடுத்து கட்டண தொகை 3.50 லட்சம் ரூபாயை பெற்றுத்தருமாறு ஆடை உற்பத்தி நிறுவனம் மீது ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது சாய ஆலை.இது குறித்து ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:-

    6 மாதமாகியும் கட்டண தொகை வழங்க மறுப்பதாக, ஆடை உற்பத்தி நிறுவனம் மீது சாய ஆலை கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. சாயமேற்றிய துணியில் ஆடை தயாரித்து ஷோரூமுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் ஆடையிலிருந்து சாயம் பிரிந்து வெண்மையாக மாறுகிறது.தரமற்ற முறையில் சாயமேற்றியதாலேயே கட்டண தொகை வழங்கவில்லை என ஆடை உற்பத்தியாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.இருதரப்பினரிடமும் உரிய ஆவணங்களை கேட்டுள்ளோம். மேலும் சாயமேற்றிய துணி மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×