search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.டி.ஒ. ஆய்வு"

    • பெண்ணிற்கு 18 வயதிற்குள் திருமணம் நடத்தினால் நடவடிக்கை
    • தரமான ருசியான சமையல் செய்து வழங்கவேண்டும் என ஆலோசனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண தடை விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு ஆரணி ஆர்டிஒ தனலட்சுமி, வருகைதந்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.இதில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சங்கீதா வரவேற்று பேசினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, ஆரணி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஆர்.டி.ஒ. தனலட்சுமி, பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய வயது 18 ஆகும். 18 வயதிற்குள் உங்கள் ஊரில் எந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்தினால் உடனடியாக 1098-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவை ஆர்.டி.ஒ. தனலட்சுமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அருகே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல மாணவிகள் விடுதியில் ஆர்.டி.ஒ. தனலட்சுமி தீடீர் ஆய்வு செய்து, மாணவிகளிடம் குறைகள் கேட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த விடுதிக்காப்பாளர் லலிதா விடுதிக்கு வந்து ஆர் டி ஒ தனலட்சுமியிடம், விடுதியில் வழங்கப்படும் உணவுகள் குறித்து

    விளக்கம் அளித்தார். ஆர்.டி.ஒ. விடுதியில் சமையல் பதிவேடுகளை ஆய்வு செய்து தரமான ருசியான சமையல் செய்து வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது ஆரணி தாசில்தார் ஜெகதீசன், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, ரமேஷ், பொன்னி, பொற்கொடி உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×