search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ் வசதி"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பாம்பு கடித்து சில மாதங்களுக்கு முன்பு 2 பேர் உயிரிழந்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்தில் பாம்பு கடித்து சில மாதங்களுக்கு முன்பு 2 பேர் உயிரிழந்தனர்.

    சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலையில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டுகள் எழுந்தது.

    இதனை தொடர்ந்து, பீஞ்சமந்தை மலை கிராமத்தி ற்காக பிரத்தியோக ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி கொண்ட வாகனத்தை ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மலை கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் மலை கிராம மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். வேலூர் கோட்டை அருகில் இருந்து இந்த வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த பிரத்யேக ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராம சாலைகளில் பயணிக்கும் வகையில் அதிக உந்து விசையுடன் கூடிய வாகனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அந்த வாகனத்தில் உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும்வசதிகளுடனும், மருத்துவ உதவி தேவைப்படும் நபருக்கான படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் பீஞ்சமந்தை மலை கிராமத்தில் முழு நேரமும் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி, வேலூர் சப் -கலெக்டர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×