search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு மற்றும் கோழி"

    • சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

    குண்டடம்:

    குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல் அவற்றை வாங்குவதற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வருகிறார்கள்.

    இந்த சந்தையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக ஆடு, கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

    கடந்த வாரம் 10கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 5ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இந்த வாரம் 10 கிேலா ஆடு ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் 1 கிலோ ரூ. 350 வரை விற்பனையானது. இந்தவாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

    இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது,வழக்கமாக புரட்டாசி சீசனில் ஆடுகள் மற்றும் கோழிகளின் விலை குறைவாகத்தான் இருக்கும்.புரட்டாசி முடியும் தருவாயில் நல்ல விலை கிடைக்கும் என்றனர்.

    ×