search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை கொலை"

    • பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன்.ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). வைரா பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் இருந்துள்ளார். மனோகரன் நடைபயிற்சி முடித்து கொண்டு பின்னர் மீண்டும் 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் புவனேஸ்வரி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். போலீஸ் மோப்பநாய் வீரா சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் வெளியே ஓடி நின்றது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

    • மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
    • பட்டப்பகலில் நடந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு பகுதியை சேர்ந்தவர் ரஸ்கின்டிரோஸ். இவரது மனைவி மெட்டில்டா (வயது 55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுடைய மகன் சென்னையிலும், ரஸ்கின்டிரோஸ் மும்பையிலும் வசித்து வருகின்றனர். இதனால் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் உள்ள வாடகை வீட்டில் மெட்டில்டா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் மெட்டில்டா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து உடன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்தவர்கள், நேற்று மதியம் மெட்டில்டாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம் என கூறினர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மெட்டில்டாவை கொலை செய்தது அவரது அண்ணன் மகனான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்தருவை பகுதியை சேர்ந்த ஜெயதீபக் (வயது35) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீசில் கூறியதாவது:-

    எனது அத்தையான மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நான் உடன்குடியில் தங்கியிருந்து அத்தைக்கு வீட்டுவேலை போன்ற உதவிகளை செய்து வந்தேன். நான் அவ்வப்போது அவரிடம் செலவிற்கு பணம் கேட்பேன். அந்த வகையில் நேற்றும் செலவிற்கு ரூ. 10 ஆயிரம் தருமாறு மெட்டில்டாவிடம் கேட்டேன்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த நான் தலையணையால் அவரது முகத்தை அழுத்தி கொலை செய்தேன். இதனால் கத்தி கூச்சலிட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பின்னர் நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜாபர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஆசிரியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
    • ஜாபர் வாலி மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து புக்கராயபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

    பக்கத்து ஊரான நடிமி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் வாலி. ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆசிரியை அடிக்கடி ஜாபர் வாலி ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தபோது இருவருக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

    ஜாபர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஆசிரியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை ஜாபர் வாலியை வற்புறுத்தி வந்தார்.

    இதனால் ஜாபர் வாலி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதையடுத்து ஆசிரியை ஜாபர் வாலி வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் பெற்றோர்களிடம் நடந்த சம்பவங்களை கூறினார்.

    அப்போது ஆசிரியையை தனியாக அழைத்து வந்த ஜாபர் வாலி உன்னை இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி வழக்கமாக இருவரும் சந்திக்கும் புக்க ராயபுரம் சாய்பாபா கோவில் குளத்தின் அருகே அழைத்துச் சென்றார்.

    பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். ஆசிரியையின் உடைகளை கழற்றி பாறைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு உடலை நிர்வாணமாக குளத்தில் வீசினார்.

    அவரது செல்போனை எடுத்து அவரது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் நான் ஜாபர் வாலியை காதலித்தேன். அவரும் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    இதனால் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டோம். ஆனால் ஜாபர் வாலி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எல்லோருக்கும் குட் பாய் அக்கா என தகவல் அனுப்பினார்.

    வாட்ஸ் அப்பில் வந்த தகவலை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஜாபர் வாலி மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து புக்கராயபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் ஜாபர் வாலியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ஆசிரியையை பலாத்காரம் செய்து கொலை செய்து நிர்வாணமாக குளத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    பிணத்தை குளத்தில் இருந்து போலீசார் மீட்டனர். கொலை செய்து குளத்தில் வீசி 20 நாட்கள் ஆனதால் அவரது உடல் முழுவதும் சிதைந்து காணப்பட்டது.

    இதையடுத்து சர்வஜனா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாபர்வாலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் மாணவன் ஒருவன் 52 வயது நிரம்பிய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
    • ஆசிரியை கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜீன் டி லஸ் நகரில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் 52 வயது நிரம்பிய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

    கொலை செய்த மாணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கூறிய பதில் போலீசாரை திகைக்க வைத்தது.

    எனக்கு பேய் பிடித்திருக்கிறது, ஆசிரியையை அந்த பேய் தான் கொலை செய்ய சொன்னது என்றான். இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசிரியை கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆசிரியை மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    ×