search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் தாமதம்"

    • மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்துள்ளது.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் வருவதில்லை. பள்ளி மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

    கல்வராயன்மலை சேராப்பட்டு அருகே உள்ள கி ளாக்காடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சேராப்பட்டு அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, இன்னாடு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்து ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து செல்கிறார்களா? மாணவ மாணவிகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அதற்கான பதில்களையும் கேட்டு கொண்டார். அப்போது கல்வராயன் மலை ஒன்றிய குழு தலைவர் சந்திரன் உடன் இருந்தார்.

    ×