search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழைத்து சென்ற போது"

    • உடல் நிலை மேலும் மோசமான–தால் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
    • ஆம்புலன்ஸ் மேட்டுக்கடை அருகே ரவுண்டானா பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் கோபால–கிருஷ்ணன்(25).கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கோபால கிருஷ்ணன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமி பிரசவத்திற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் அனுமதிக்கப்ப ட்டார்.

    கடந்த 24-ந் தேதி அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதில் சிறுமியின் நிலைமை மோசமானதால் ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டார்.

    அங்கு உடல் நிலை மேலும் மோசமான–தால் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆம்புலன்ஸ் மேட்டுக்கடை அருகே ரவுண்டானா பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது.

    இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 27-ந் தேதி அதிகாலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மொடக்கு றிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவின் கீழ் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல் ஆம்பு லன்சை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை டிரைவர் சரத் என்பவர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    ×