search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்னவ்"

    • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.

    சின்னத்திரை நடிகரான அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். தனது கணவர், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா புகார் தெரிவித்தார்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    ஆனால் தனது மனைவிதான் அவரது நண்பர்கள் சொல்வதை கேட்டு இதுபோல் நடந்து கொள்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அர்னவ் கூறினார். மேலும் அர்னவ், திவ்யா தன்னுடன் சண்டைபோடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா அளித்த புகாரின்பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    இதனை மறுத்த அர்னவ், என் மனைவி திவ்யாவை நான் அடித்ததாக போலீசில் கூறிய புகாரில் உண்மை இல்லை. என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரில் என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார். மேலும் எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

     

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

    இந்நிலையில் நடிகர் அர்னவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் திவ்யாவை அர்னவ் மிரட்டும் ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், நான் தமிழன் என்றும் தமிழ்நாட்டில் வந்து உன் வேலையை காண்பிக்கிறாயா என்று அர்னவ் பேசியுள்ளார். நடிகர் அர்னவ் தன்னை வேண்டும் என்றே திட்டமிட்டு இஸ்லாமியராக மதம் மாற்றி கர்ப்பம் அடைய செய்து வேறு ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் எனவும் எந்த ஒரு ஆதரவின்றி தான் நிற்பதாகவும் மாநில மகளிர் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.

    சின்னத்திரை நடிகரான அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். தனது கணவர், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா புகார் தெரிவித்தார்.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    ஆனால் தனது மனைவிதான் அவரது நண்பர்கள் சொல்வதை கேட்டு இதுபோல் நடந்து கொள்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அர்னவ் கூறினார். மேலும் அர்னவ், திவ்யா தன்னுடன் சண்டைபோடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா அளித்த புகாரின்பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    இந்நிலையில் நேற்று திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சின்னத்திரை நடிகர் அர்னவ், நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, என் மனைவி திவ்யாவை நான் அடித்ததாக கூறி போலீசில் புகார் அளித்தார். ஆனால் என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரில் என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    எனக்கு என் மனைவி வேண்டும். என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும். எங்கள் குடும்ப சண்டையை அவருடன் இருப்பவர்கள் இப்படி பெரிதாக்கிவிட்டனர். திவ்யாவின் நண்பர்கள் தரப்பில் வக்கீல் ஒருவருடன் சேர்ந்து இதுபோல் செய்து வருகின்றனர். இதுவரை திவ்யா போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கிறார். என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும். பிறக்கப்போகிற குழந்தையுடன் நான் இருக்க வேண்டும். என் மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. மீறி பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்.

    அர்னவ் - திவ்யா

    அர்னவ் - திவ்யா

     

    அர்னவ் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் திவ்யாவும், தன்னுடன் நடிக்கும் சக நடிகை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தேன். அர்னவ் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாய் அளவில் மட்டுமே கூறி வருகிறார். மனதளவில் அவர் கூறவில்லை. 45 நாட்கள் என்னுடன் பேசாமல் ஒரே வீட்டில் இருந்தார். இதனாலேயே நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் கருவை கலைக்க வேண்டும் என்றால் ஏன் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் அர்னாவை திருமணம் செய்து கொண்டதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா அறிவித்திருந்தார்.
    • இவர் தற்போது கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கேளடி கண்மணி என்கிற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர். தொடர்ந்து இவர் மகராசி, செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரின் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.


    அர்னாவ்

    அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டதை நடிகை திவ்யா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை திவ்யா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


    அர்னாவ் - திவ்யா

    மேலும் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ணவ் தற்போது தன்னை விட்டு விட்டு ஹன்சிகா என்ற சீரியல் நடிகையுடன் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சமீபத்தில் தான் எனக்கும் அர்ணவ்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார்.


    அர்னாவ் - திவ்யா

    இரண்டு வருடத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன்.


    திவ்யா

    ஆனால் அர்ணவ் என்னை அடித்து நான் கீழே விழுந்ததில் என்னுடைய  வயிற்றில் அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழித்து தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை.

    என்னால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது" என்று திவ்யா கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×