search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் கோவில் சுற்றுலா"

    • சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.
    • திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்றைய தினம் வரை 866 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.

    சென்னை:

    சென்னை, பாரிமுனை, காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு காளிகாம்பாள் கோவிலில் இருந்து 10 அம்மன் கோவில்களுக்கு புறப்பட்ட ஆன்மிக சுற்றுலா வில் 47 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டு, கோவில் பிரசாதங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.

    ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு தனியாருக்கும் தரப்படவில்லை. அந்த இடத்தின் ஒரு பகுதி சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் குடிநீர் திட்டத்திற்கு வழங்கப்பட்டு, அதற்கான நிலுவைத் தொகை ரூ.10 கோடியை இந்த ஆட்சி வந்த பிறகு தான் வசூலித்து அறக்கட்டளைக்கு செலுத்தப் பட்டுள்ளது.

    அதேபோல் ஆளவந்தார் திருவரசை மேம்படுத்த ரூ.1 கோடியும், அறக்கட்டளை சார்பில் பாடசாலை நிறுவுவதற்கு ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி தலசயன பெருமாள் கோவில் மற்றும் திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு தேவையான அனைத்து நித்தியப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த கோவில்களில் திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு தான் இந்த ஆட்சி அதிகளவில் அக்கறை செலுத்தி ஆக்கிரமிப்பு அகற்றி ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணியும் நடைபெற்று வருகிறது. ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிர்மறையாக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்றைய தினம் வரை 866 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. ரூ.4764 கோடி மதிப்பிலான 5,080 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

    கோவிலுக்கு சொந்தமான இதுவரை 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் ரோவர் கருவியின் வாயிலாக அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளன.

    ஆகவே, தி.மு.க. ஆட்சியில் இறை சொத்து இறைவனுக்கே என்ற வகையில் அந்த சொத்துக்களை பாதுகாப்பது அவை எந்த நோக்கத்திற்காக திருக்கோவில்களுக்கு எழுதி வைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற பணியில் இந்து சமய அறநிலைத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×