search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதி பேச்சுவார்த்தை"

    • கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக நடந்தது
    • தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் கிராமத்தில் நாளை (வியாழன்) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பன்னீர் முருகன் கோவிலுக்கு அபிஷேக கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீஸ் பாதுகாப்பு டன் திருவிழாவினை நடத்த இரு தரப்பினரிடம் அறிவுறுத்தி எழுத்துமூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், தலைமை யிடத்து துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்

    கடலூர்:

    விருத்தாசலம் வட்டம் மந்தாரக்குப்பத்தில் கடலூர் -விருத்தாசலம் நெடுஞ்சா லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவ லகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருப்பதாக கூறி மந்தாரக்குப்பம் போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அரசை கண்டித்து போரா ட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இதனை யடுத்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கும் கட்சியினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

    விருத்தாசலம் சப்-கலெ க்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீத், மந்தாரக்கு ப்பம் காவல் ஆய்வாளர் மலர்விழி, தேசிய நெடுஞ்சா லை இளநிலை பொறியாளர் செந்தமி ழ்ச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முருகன், நகர செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதா கவும், மேலும் அந்த பகுதியில் போக்குவ ரத்து இடையூறாக ஆக்கிரமி த்துள்ள கடைகளையும் அகற்றுமாறு அதிகாரிக ளிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்தனர்.

    ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஏமன் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் 84 பேர் உயிரிழந்தனர். #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    சனா:

    ஏமன் நாட்டில் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

    அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில், செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 24 மணிநேரமாக நடத்திய தாக்குதல்களில் 73 ஹவுத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்களும் உயிரிழந்தனர்

    பல போராளிகளும் 17 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர் என ஏமன் நாட்டு ஊடகங்கள் இன்றிரவு செய்தி வெளியிட்டுள்ளன. #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    ×