என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமீஷா படேல்"
- 'தேசிமேஜிக்' படத்தில் நடிப்பதற்காக நடிகை அமீஷா படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- பின்னர் கால்ஷீட் தருவதில் அமீஷா படேல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
'தேசிமேஜிக்' படத்தில் நடிப்பதற்காக நடிகை அமீஷா படேலுக்கு ரூ.2.5 கோடி பேசப்பட்டு அதற்கான பணத்தை தயாரிப்பாளர் அஜய்குமார்சிங் வழங்கினார். ஆனால் நடிகை அமீஷா படேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் கால்ஷீட் தருவதில் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொட்ந்து அஜய்குமார் சிங் தான் நடிப்பதற்காக கொடுத்த பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்க அமீஷா படேல் அதற்காக காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் அஜய் குமார்சிங் மற்றும் மானேஜர் திங்குசிங் இருவரும் நடிகை அமீஷா படேல் மீது ராஞ்சி கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்ற போது நடிகை அமீஷா படேல் தரப்பு வக்கீல் குறிப்பிட்ட நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாததால் கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக நடிகை அமீஷா படேலுக்கு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சுக்லா ரூ.500 அபராதம் விதித்தார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்