search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபதாரம்"

    • எடை அளவைகளுக்கான முத்திரையிடும் முகாம் தொடங்குகிறது.
    • ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள வணிகர்கள் நலன் கருதி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் எடை அளவுகள் முகாம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வணிகர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நகரில் உள்ள முத்து வடுகநாதர் சித்தர் கோவில் வளாகத்தில் நடைபெறும் முகாமில் தாங்கள் பயன்படுத்தி வரும் மின்னணு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள், விட்ட தராசுகள், எடை கற்கள், நீட்டல் அளவைகளை ஆய்வாளர் முன்பு மறு பரிசீலனை செய்து அவற்றிற்கு முத்திரை வைத்து பயன்பெறலாம். மேலும் வணிகர்கள் முத்திரை வைக்க தவறும் பட்சத்தில் எடை அளவு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×