search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் குழு ஆய்வு"

    • விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி, தொற்று நடவடிக்கைகள் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

      திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். நோயாளிகள் மற்றும் அங்கு இருக்கும் செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா என ஆய்வு நடந்தது.மூலப்பொருட்களை பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கும் முறை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விவரங்களை கவனித்து வாங்கி உரிய காலத்துக்குள் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. மூலப்பொருட்களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி, தொற்று நடவடிக்கைகள் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

    பணியாளர்கள் தலைக்கவசம், முகமுகவசம் அணிய வேண்டும். பணியாளர்களுக்கு உரிய மருத்துவ சான்று சரியான கால இடைவெளியில் தடுப்பூசி வழங்கியதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் உரிய கால இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். உணவுப்பொருட்களை தரையில் இருந்து அரை அடி உயரத்தில் பலகையில் முறையாக அடுக்கி வைக்க வேண்டும். உணவுப்பொருட்களை இருப்பு தேதி அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உணவகம், உணவு பாதுகாப்புத்துறையின் உரிய சான்றிதழ் பெற்று செயல்படுகிறது. உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

    • மீண்டும் மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்
    • டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்வதில் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் ெரயில்வே கிராசிங் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்தப் பணியை மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் இன்று ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே அதிகாரிகளிடம், சுரங்கப்பாதை பணிகள் எப்போது முடியும் என கேட்டார்.

    அதற்கு அதிகாரிகள் தரப்பில், சுரங்கப்பாதை பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் பணியை முடிக்க ஆறு மாதம் எடுத்துக் கொள்ளாமல் விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய மந்திரி வி.கே.சிங் உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த மாவட்டமாகும். இங்கு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். எனவே விமான நிலையம் அமைத்தால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே கன்னியாகு மரியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாமிதோப்பு பகுதியில் இடமும் தேர்வு செய்யப்பட்டது.

    ஆனால் சில காரணங்களால் விமான நிலையம் அமைக்கும் திட்டம் நிலுவையில் இருந்தது. ஆனால் தற்போது விமான நிலையம் கன்னி யாகுமரி மாவட்டத்தில் அமைப்பது தொடர்பாக மீண்டும் மத்திய அதிகாரிகள் குழு வருகை தந்து ஆய்வு செய்வார்கள்.

    அவர்களின் அறிக்கையின்படி விமான நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு அமைப்பது என முடிவு செய்யப்படும்.

    நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலும் நான்கு வழி சாலை பணிகள் வருகிற ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இதற்காக ரூ.1,041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை 2 வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாகர்கோவில்- திருவனந்தபுரம் இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக சில நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்த பணி 2 முதல் 2½ வருடத்திற்குள் முடிக்கப்படும்.

    கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் 55 சதவீதம் வந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் ஜெர்மனியை பெண்ணுக்கு தள்ளி 4-வது இடத்தை இந்தியா அடையும். உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்வதில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், துணைத் தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பம், கோட்டார் ரெயில்வே மேலாளர் முத்து மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 450 பேர் வரை உயிரிழந்தனர்.
    • தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை இந்த குழுவினர் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பிறகு விபத்துக்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 450 பேர் வரை உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து உள்ளனர். மாநில நெடு ஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் தமிழக சாலை கண்காணிப்பு ஆராய்ச்சி இயக்குனர் தலைமையில் 3 உதவி இயக்குனர்கள் கொண்ட குழு இன்று நாமக்கல் வந்தது. அவர்கள் நாமக்கல் திருச்சி சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறும் சின்ன வேப்பநத்தம், புதுப்பட்டி பகுதிகளிலும், சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி, முத்துக்காப்பட்டி பகுதிகளிலும், திருச்செங்கோட்டில் 2 இடங்களிலும் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்கள்.

    இந்த ஆய்வு பணியானது 4 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. அதன் பிறகு விபத்து நிகழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை இந்த குழுவினர் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பிறகு விபத்துக்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×