search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம்"

    • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் எம், எல், ஏ, வமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர் ஏ செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் பாண்டுரங்கன், வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் ஏழுமலை, கிளை செயலாளராக அல்லி நகர் சங்கர், கிளை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

    • சொத்து வரி உயர்வை கண்டித்து நடந்தது
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.திருமூலன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஒன்றிய செயலாளர்கள் எம் மகேந்திரன் பி.கே.நாகப்பன், அரங்கநாதன் சீ.துரை, மாவட்ட இணைச் செயலாளர் விமலா மகேந்திரன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் கோமதி ரகு, நகர செயலாளர் வெங்கடேசன், வக்கில்கள் மெய்யப்பன், பூவேந்திரன், முனுசாமி, செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குமரேசன், கவுன்சிலர் ரா,ஜ கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சொத்து வரி உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னால் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. செங்கம் நளினிமனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஆலத்தூர்.கே.மூர்த்தி, காரப்பட்டு ஏ.ரமேஷ், ஜமுனாமரத்தூர் வெள்ளையன், போளூர் வடக்கு ஒன்றியம் அன்பழகன், புதுப்பாளையம் பேரூர் கழக செயலாளர் பி.எஸ்.ராதா உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×