search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young man stabbed"

    • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் பெற்றோரை அரிவாள் வெட்டிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் சராமரியாக தாக்கினர்
    • வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேடசந்தூர:

    வேடசந்தூர் அருகே வெள்ளையகவுண்டனூர் பச்சலாகவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவரது மனைவி ராணி(54). இவர்கள் மகள் உமா. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உமாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது பெற்றோருடன் தங்கி மில் வேலைக்கு சென்றுவந்தார். அப்ேபாது தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த காளிமுத்து(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் உமாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் கண்டித்தனர். இதனைெதாடர்ந்து உமா காளிமுத்துவுடன் உள்ள தொடர்பை துண்டித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து உமா வீட்டுக்கு சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். உயிருக்கு பயந்து அவர்கள் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தம்பதியை காப்பாற்றினர். மேலும் காளிமுத்துவை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    காயமடைந்த 2 பேரை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டி.எஸ்.பி துர்க்கா தேவி உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, டி.எஸ்.பி கிரைம் போலீசார் பாசித்ரகுமான், நாகராஜ் மற்றும் போலீசார் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×