search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker died"

    உடுமலையில் மரத்தை வெட்டி அகற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அம்மாபட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40). இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

    உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரம், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. நேற்று முன்தினமும் இந்த பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

    இதில் திருப்பூர் ஐஸ்வர்யா நகர் பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்தது. இதனால் கட்டிடத்திற்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. மரத்தை வெட்டி அகற்றும் பணிக்காக ஆனந்தகுமார் உள்பட 4 பேர் சென்றனர். மரத்தை வெட்டி அகற்றியபோது அருகில் மின் கம்பி மீது மரம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் தாக்கி ஆனந்தகுமார் தூக்கி வீசப்பட்டார்.

    அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மின் வழித்தடம் அருகே மரம் முறிந்து விழுந்தால் முறைப்படி மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவார்கள்.

    இல்லையென்றால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×