search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Who walked on the road Curled up and killed"

    ஓசூரில்சாலையில் நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து பலியானார்.
    ஓசூர்,

    ஈரோடு மாவட்டம் கிருஷ்ணன்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சாரீப் (வயது 37). இவர் ஓசூர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குமுதேப்பள்ளி பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று சுருண்டு கீழே விழுந்து பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×