search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water leakage"

    • லோயர்கேம்பில் இருந்து போடி வரை 18-ம் கால்வாய் செல்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது.
    • அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கம்பம்:

    முல்லைபெரியாறு அணையில் இருந்து விடப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14707 ஏக்கர் விவசாய நில பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில இடங்களில் தண்ணீர் நீர்நிலைகளில் தேக்கப்பட்டு வருகின்றன.

    லோயர்கேம்பில் இருந்து போடி வரை 18-ம் கால்வாய் செல்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு க.புதுப்பட்டி அருகே பாலம் உடைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து பொதுப்பணித்துறையினர் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தற்போது 18-ம் கால்வாய் தொடக்கப்பகுதியில் உள்ள தொட்டிபாலம் பல இடங்களில் நீர்கசிந்து சேதமடைந்துள்ளது. இதனை பராமரிக்காவிட்டால் விரைவில் தொட்டிப்பாலம் உடையும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×