என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Water leakage"
- லோயர்கேம்பில் இருந்து போடி வரை 18-ம் கால்வாய் செல்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது.
- அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்:
முல்லைபெரியாறு அணையில் இருந்து விடப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14707 ஏக்கர் விவசாய நில பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில இடங்களில் தண்ணீர் நீர்நிலைகளில் தேக்கப்பட்டு வருகின்றன.
லோயர்கேம்பில் இருந்து போடி வரை 18-ம் கால்வாய் செல்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு க.புதுப்பட்டி அருகே பாலம் உடைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து பொதுப்பணித்துறையினர் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது 18-ம் கால்வாய் தொடக்கப்பகுதியில் உள்ள தொட்டிபாலம் பல இடங்களில் நீர்கசிந்து சேதமடைந்துள்ளது. இதனை பராமரிக்காவிட்டால் விரைவில் தொட்டிப்பாலம் உடையும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்