search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wastewater houses"

    திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு 8 தெருக்கள் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள பாதாள சாக்கடை அம்பேத்கார் நகர் வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையை கடந்து நெய்தல் நகரில் வெளியேறுகிறது.

    தற்போது அங்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடை பெறுகின்றன. இதனால் பாதாள சாக்கடை இணைப்புகள் அடைக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து கழிவுநீர் வெளியேறாமல் அம்பேத்கார் நகரில் ஆங்காங்கே வெளியேறி வெள்ளம் போல் ஓடிக் கொண்டிருந்தது.

    அடிக்கடி மழை பெய்வதால் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து அங்குள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது.

    இதனால் அவதிப்படும் மக்கள் இன்று விம்கோ நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசாரும், மெட்ரோ ரெயில் அதிகாரிகளும் விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேசி சமரசம் செய்தனர். அதை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×