search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virudhunagar police officers"

    புகார் கொடுக்க வருபவர்களிடம் சுயபுராணம் பாடுவதாக போலீஸ் அதிகாரி மீது கம்யூனிஸ்டு கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் டவுன் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக இருப்பவர், யார் புகார் கொடுக்க வந்தாலும் தனது சுய புராணத்தை பாடி வந்துள்ளார்.

    விசாரணைக்கு வருவோர், மனுதாரர்கள் என யார் வந்தாலும் தனது வருமானம், குழந்தைகளின் படிப்புச் செலவு போன்றவை பற்றி கூறி வந்தாராம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்கச் சென்றபோது அவர்களிடமும் இதே கதையை கூறியதோடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என செல்லாமல் வாழும்படி தெரிவித்தாராம்.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த வி‌ஷயத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தலையிட்டு புகார் கொடுக்க வருவோரிடம் போலீஸ் அதிகாரி சுயபுராணம் பாடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×